
இங்கிலாந்து தடுமாற்றம்
மற்றொரு பக்கம், இங்கிலாந்து எளிதில் அரையிறுதிக்குள் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொந்த மைதானத்தில் ஆஸ்திரேலயாவுக்கு எதிராக 64 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையிடம் 232 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமலும் தோற்றது. அதற்கு முன்பாக பாகிஸ்தானிடமும், தோல்வியை தழுவி, தற்போது அரையிறுதி வாய்ப்பையே இழுபறியில் வைத்திருக்கிறது இங்கிலாந்து.

சொந்த மண்ணில் ஆதிக்கம்
இந் நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டம் குறித்து கேப்டன் கோலி கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவதை பார்த்திருப்போம்.

அழுத்தத்தால் வெற்றி
ஆனால், மிக பெரிய தொடரான உலக கோப்பையில் இப்படி தடுமாறி வருவது ஆச்சரியமளிக்கிறது. முன்னமே கூறியது போல், அழுத்தத்தை எந்த அணி சரியாக கையாள்கிறதோ அதுவே அன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணி.

எளிதாக நினைக்கக்கூடாது
இங்கிலாந்து அதனை செய்ய தவறி வருகிறது போல தெரிகிறது. இருப்பினும், அவர்களுடன் விளையாடும் போது, எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்று விட்டது. எனவே இந்தியாவுடனான போட்டி இங்கிலாந்துக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications