
பாகிஸ்தானின் இன்னிங்ஸ்
ஓப்பனிங் வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் நிதானமாக தொடங்கி ரன்களை உயர்த்தி வந்தனர். ஆனால் நீண்ட நேரம் அவர்கள் பார்ட்னர்ஷிப் நீடிக்கவில்லை. டேஞ்சர் வீரரான முகமது ரிஸ்வான் 15 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதன்பின்னர் வந்த முகமது ஹாரிஸ் 8 ரன்களுக்கு அவுட்டாக பாகிஸ்தான் அணி 48 ரன்களுக்கெல்லாம் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

நல்ல பார்ட்னர்ஷிப்
இதன்பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் - ஷான் மசூத் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார்கள். இதனால் 45/2 என இருந்த ஸ்கோர் 84 ரன்களுக்கு சென்றது. ஆனால் அப்போது தான் கண்டமே ஏற்பட்டது. அடில் ரஷித் வீசிய பந்தில் கேப்டன் பாபர் துரதிஷ்டவசமாக 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன.

கடைசி நேர போராட்டம்
ஷான் மசூத் 38 ரன்கள், சதாப் கான் 20 ரன்கள், இஃப்திகார் டக் அவுட், முகமது நவாஸ் (5) என அடுத்தடுத்து சரிய 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த மைதானத்தில் 138 என்பது விரட்டக்கூடிய ஸ்கோர் தான். ஆனால் அதனை இங்கிலாந்துக்கு எளிதாக எடுத்து தர முடிவெடுக்காத பாகிஸ்தான் டாப் கிளாஸ் பவுலிங்கை வெளிப்படுத்தினர்.

ஓப்பனிங்கே ஷாக்
இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ், சாஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் வந்த ஃபிலிப் சால்ட் 10 ரன்களுக்கும், ஜாஸ் பட்லர் 26 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 45 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்தது.

சாம்பியன்ஸ்
இதனால் ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது. தூண் போன்று நின்று விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 48 பந்துகளில் 52 ரன்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஏற்கனவே 2010ம் ஆண்டு கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது கோப்பையாகும்.


Click it and Unblock the Notifications











