
முதல் 3 வீரர்கள்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பிளேயிங் லெவனில் திரும்பியுள்ளதால், தொடக்க வீரர் இஷான் கிஷன் வெளியே செல்ல அதிக வாய்ப்புள்ளது. நம்பர் 3 வது வீரராக விராட் கோலி திரும்பியுள்ளதால், அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய தீபக் ஹூடாவை ஓபனிங்கில் களமிறக்கவும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடுவரிசை
நடுவரிசையில் சூர்யகுமார் குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஜடேஜாவும் பிளேயிங் லெவனில் திரும்பியுள்ளதால், அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகமே.

வேகப்பந்துவீச்சு
இதே போன்று சாஹல் பிளேயிங் லெவனில் முக்கியம் என்பதால் 2 வேகபந்துவீச்சாளருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். அதில் ஒன்று புவனேஸ்வர்குமார் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார். இதனால் எஞ்சியுள்ள 1 இடத்தில் ஹர்சல் பட்டேலா, பும்ராவா என்ற குழப்பம் ஏற்பட, நிச்சயம் பும்ராவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும்.

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, தீபக் ஹூடா, 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, ரிஷப் பண்ட், 7, தினேஷ் கார்த்திக், 8,ஜடேஜா, 9, புவனேஸ்வர் குமார், 10, பும்ரா, 11, சாஹல்


Click it and Unblock the Notifications











