முதல் டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் லீஸ் (4), ஜாக் கிரௌலி (8) , கேப்டன் ஜோ ரூட் 13, லாரன்ஸ் (20) என அடுத்தடுத்து சொதப்பியதால் பின்னடைவாக சென்றது. இதன் பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ 140 ரன்களும், ஃபோக்ஸ் 42 ரன்களும் எடுக்க முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகரித்த ரன் ரேட்
இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 202/4 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. போனர் (34), ஜேசன் ஹோல்டர் (43) ஆகியோர் சேர்க்க 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் எந்த அணிக்கு சாதகமாக முடியும் என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் 2ம் நாள் ஆட்டத்தின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்தது.
ரன்கள் அதிகமாக சென்றதால் களத்தில் இருந்த கேப்டன் ஜோ ரூட், அணி வீரர்கள் அனைவரையும் ஆலோசனைக்கு அழைத்தார். அப்போது ஜோ ரூட் தவிர்த்து 9 வீரர்கள் மட்டுமே கூடி நின்று ஆலோசனை நடத்தினர். வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் மைதானத்தின் ஓரமாக தனியாக நின்றுக்கொண்டிருந்தார்.
|
கவனிக்காத மார்க் வுட்
ஜோ ரூட் அழைத்ததை மார்க் வுட் கவனிக்கவில்லை. இது ரூட்டிற்கும் தெரிந்தது. இருப்பினும், நேரம் குறைவாக இருந்ததால், அதுகுறித்து கண்டுகொள்ளாமல் ரூட் ஆலோசனை செய்து வந்தார். இதனை புரிந்துக்கொண்ட மார்க் வுட்டும், ஆலோசனையில் பங்கேற்றதை போல், நின்ற இடத்திலேயே சைகை செய்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், வர்ணனையாளர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.