டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எரிக் சைமன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக இருந்த வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ராபின் சிங் ஆகியோர் கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கு பின்னர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை எட்டி விட்டாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கடுமையாக போராட வேண்டியுள்ளது.குறிப்பாக பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையி்ல இந்திய அணி இன்னும் அதிகமான திறமையை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. பந்து வீச்சுப் பயிற்சியாளர் இல்லாதது குறையாக தெரிவதாக டோணியும் கூறியுள்ளார்.இதையடுத்து பவுலிங் கோச்சை நியமிக்க வீரர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்திவந்தது. தென்னாப்பிரிக்காவின் ஆலன் டொனால்டு, எரிக் சைமன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 47 வயது எரிக் சைமன்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் என்.சீனிவாசன் அறிவித்துள்ளார்.23 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஃபாஸ்ட் பவுலராக விளையாடியுள்ள சைமன்ஸ் 2002 முதல் 2004 வரை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்தபோது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் சைமன்ஸ் பணியாற்றினார். #13;