
கோலியின் சர்ச்சை
இந்த அணியில் விராட் கோலியின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது தான் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது. கோலியின் மோசமான ஃபார்ம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகின்றன. மற்றொருபுறம் கோலிதான், தனக்கு சிறிது காலம் ஓய்வு தேவை எனக் கோரிக்கை வைத்ததாகவும் பிசிசிஐ அதிகாரி கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ரஷித் லதீஃப் விளக்கம்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் தலையிட்டுள்ளார். அதில், இந்திய அணியில் இருந்து கோலியை நீக்க ஒரு தேர்வுக்குழு அதிகாரியால் கூட முடியாது. அவரை நீக்கும் அதிகாரி இன்னும் பிறக்கவில்லை. அணியில் யார் என்ன செய்தாலும், அது கோலியின் தவறாக மாற்றப்பட்டு வருகிறது.
Recommended Video

பலி ஆடு அவர்
2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் மற்றும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் இரண்டையுமே எடுத்துக்கொள்ளுங்கள். அதில் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்றால்?.. மற்ற வீரர்கள் என்ன செய்துக்கொண்டிருந்தனர். ஏன் தோற்றது?. மற்ற வீரர்களின் ஃபார்ம் அவுட்களும், கோலியின் பின் மறைக்கப்படுவதாக ரஷித் லதிஃப் கூறியுள்ளார்.

ஆசியக்கோப்பை திட்டம்
இங்கிலாந்து தொடருடன் ஓய்வுக்காக செல்லும் விராட் கோலி, தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பயிற்சி மேற்கொள்ளவிருக்கிறார். அதில் முழுமையாக தன்னை தயார்படுத்திக்கொண்ட பின், ஆசியக்கோப்பையில் புதிய அவதாரம் எடுத்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications