
அதிரடி ஆட்டம்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷாக் கிராலி, பென் டக்கட் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். எனினும் ஷாக் கிராலி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பென் டக்கட், 49 பந்துகளில் 63 ரன்களை விளாசிய நிலையில், அப்ரர் அகமது பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

சரிந்த விக்கெட்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், அப்ரர் அகமது பந்தை எதிர்கொள்ள முடியாமல் 8 ரன்களில் எல்பிடபியூள் ஆக, ஹரி புருக் ரன்களில் நடையை கட்டினார். மறுமுனையில் ஹாரி போப், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியது போல் 61 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி மதிய நேர இடைவேளையின் போது 180 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

அபார பந்துவீச்சு
இதன் மூலம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முதல் செஷனில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து படைத்தது. எனினும் 5 முக்கிய விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது பின்னடைவாக மாறியது. இருப்பினும்இங்கிலாந்து வீரர்கள் அதிரடியை காட்டுகிறேன் என்ற பெயரில் கொத்தாக விக்கெட்டுகளை இழக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாபர் அசாம் அரைசதம்
அறிமுக போட்டியில் களமிறங்கிய சுழற்பந்துவீச்சாளர் அப்ரர் அகமது 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, அறிமுக டெஸ்ட் இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையை அப்ரர் அகமது பெற்றார். இதனையடுத்து பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் 14 ரன்களிலும், இமார் உல் ஹக் டக் அவுட்டாகியும் வெளியேற, கேப்டன் பாபர் அசாம் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 107 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இழந்தது.


Click it and Unblock the Notifications











