For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேங்கப்பா.. ! துலிப் கோப்பையில் ரஹானே மிரட்டல்.. ஒரே இன்னிங்சால் இந்திய அணியில் இடம் உறுதி

சென்னை: துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரஹானே இரட்டை சதம் விளாசி அசத்தி இருக்கிறார்.

Recommended Video

Duleep Trophy-யில் Rahane-வின் மிரட்டலான Double Ton | Aanee's Appeal | Cricket

ரஞ்சி கோப்பை , இராணி கோப்பை தொடருக்கு பிறகு இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிக முக்கிய தொடராக கருதப்படுவது துலிப் கோப்பை தொடராகும்.

இதில் நாடு முழுவதும் Zone களாக பிரிக்கப்பட்டு, அந்த பிராந்தயத்தில் உள்ள நட்சத்திர வீரர்கள் ஒரு அணியில் இடம்பெற்று விளையாடுவார்கள்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு பிராந்திய அணிக்காக ரஹானே, பிரித்வி ஷா, ஜெய்ஷ்வால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தப் போட்டியில் வடகிழக்கு பிராந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் பிரிதிவி ஷா வழக்கம்போல் அதிரடியாக விளையாடினார்.

ஜெய்ஷவால் அபாரம்

ஜெய்ஷவால் அபாரம்

சேவாக் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை விளாசி 121 பந்துகளில் 113 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் பொறுப்பாக விளையாடி சதத்தை கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 206 ரன்களை சேர்த்தது. 3வது வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் ரஹானே ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே ரஹானே ஆக்கோரஷமாக விளையாடினார்.

ரஹானே இரட்டை சதம்

ரஹானே இரட்டை சதம்

தனது பழைய ஆட்டத்தை நேர்த்தியான ஷாட்கள் மூலம் ரஹானே ரன் குவித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் ரஹானேவை பிரிக்க முடியாமல் வடக்கு பிராந்திய அணி வீரர்கள் தடுமாறினர். 264 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 207 ரன்களை விளாசி அசத்தினார். இதில் 18 பவுண்டர்களும் ஆறு இமாலய சித்தர்களும் அடங்கும். ஜெய்ஸ்வால் 228 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் தற்போது ரஹானே 207 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்.

முச்சதத்திற்கு வாய்ப்பு

முச்சதத்திற்கு வாய்ப்பு

இதனால் ரஹானேவுக்கு இன்று முச்சதம் விளாச வாய்ப்பு இருக்கிறது. ரஹானே தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிய காரணத்தால், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட ரஹானே இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் ஓய்வு நேரத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ள ரஹானே தற்போது ஃபார்ம்க்கு திரும்பியுள்ளார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான வரும் நவம்பர் மாதம் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரஹானே இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது,

Story first published: Saturday, September 10, 2022, 9:03 [IST]
Other articles published on Sep 10, 2022
English summary
India star Player Rahane Hits Double ton in Duleep Trophy திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இரட்டை சதம் விளாசிய ரஹானே.. துலிப் கோப்பையில் அசத்தல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+