
4வது போட்டி
இதனையடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய 4வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொடரை கைப்பற்ற தென்னாப்பிரிக்க அணியும், சமன் செய்ய வேண்டும் என இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

புதிய பிரச்சினை
இந்நிலையில் இந்த பரபரப்பான போட்டியில் புதிய குழப்பம் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் வானிலை அறிக்கை தான். இந்தியாவில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், ராஜ்கோட் பகுதியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் போட்டி தடைபடும் அளவிற்கான கடும் மழை பொழியவுள்ளதாக தெரிகிறது.

என்ன குழப்பம்
மைதானம் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு நல்ல மழை பொழிந்துள்ளது. வீரர்கள் அனைவரும் முன்கூட்டியே பகலில் பயிற்சிகளை முடித்துவிட்டதால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இன்று இரவுதான் போட்டி நடைபெறும் என்பதால் கண்டிப்பாக மழையின் குறுக்கீடு இருக்கும் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்
ராஜ்கோட் மைதானம் எப்போதுமே ஒரு அதிக ஸ்கோர் போட்டியாக தான் இருந்துள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு நன்கு உதவக்கூடிய பிட்ச் ஆக இருக்கும் என்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 183 ரன்கள் வரை குவிக்கலாம். ஆனால் மழை குறுக்கீடு செய்தால், ஈரப்பதத்தால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சற்று உதவக்கூடும்.


Click it and Unblock the Notifications











