
இந்திய பேட்டிங்
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது பேட்டிங் தான். ஓப்பனிங் வீரர்கள் கே.எல்.ராகுல் 57 (28), ரோகித் சர்மா 43 (37) என தரமான அடிதளத்தை அமைக்க, பின்னர் வந்த விராட் கோலி 49 (28), சூர்யகுமார் யாதவ் 61 (22), தினேஷ் கார்த்திக் 17 (7) என அடுத்தடுத்து ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

ஆட்டநாயகன் விருது
இந்நிலையில் போட்டிக்கு பிறகு ஐசிசி அதிகாரிகள் எடுத்த ஒரு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆட்ட நாயகன் விருதை யாரும் எதிர்பாராத வகையில் கே.எல்.ராகுலுக்கு வழங்கினர். அதிக ஸ்கோர் அடித்த வீரர், அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் அல்லது இரண்டிலுமே சிறப்பாக இருந்தவர்களுக்கு தான் இந்த விருது வழங்கப்படும். அப்படி பார்த்தால் நேற்று சூர்யகுமார் யாதவுக்கு தான் நியாயப்படி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

எப்படி தெரியுமா?
ஏனென்றால் கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 203 ஆகும். ஆனால் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளிலேயே 61 ரன்களை குவித்துவிட்டார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 277 ஆகும். இருவருமே எந்தவித கேட்ச்-களும் பிடிக்கவில்லை. இப்படி இருக்கையில் சூர்யகுமார் யாதவுக்கு ஏன் விருது தரப்படவில்லை என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

என்ன காரணம்
கே.எல்.ராகுல் கடந்த போட்டியில் ஸ்டரைக் ரேட் குறைவாக உள்ளது என விமர்சனங்களுக்கு ஆளானார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியில் ஸ்ட்ரைக் ரேட்டை இரட்டிப்பு ஆகினார். எனவே அந்த கம்பேக்-ஐ மனதில் வைத்து ஆட்ட நாயகன் விருதை வழங்கினார்களோ என வல்லுநர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications