மறக்க முடியாத ரசிகர்கள்
சென்னை ரசிகர்களின் அன்பு தமக்கு பிடித்தமான ஒன்று... அவர்களை மறக்கவே முடியாது என்று பலமுறை அவர் உணர்ச்சிப்பெருக்குடன் கூறி இருக்கிறார்.
பட்டியலில் முதலிடம்
இந்த ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று, புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந் நிலையில் அவர் ரசிகர்கள் பற்றி கூறியிருப்பதாவது:
பிட்ச் பற்றி கருத்து
ராஜஸ்தான் அணிக்கு எதிராக பார்ட்னர்ஷிப் வேண்டும் என்று விரும்பினோம், ஆட்டம் செல்லச்செல்ல பிட்ச் எளிதாகும் என்று எண்ணினோம். அணியில் சாண்ட்னரை கொண்டு வர காரணம் ராஜஸ்தானில் இடது கை வீரர்கள் இல்லை என்பதால் தான்.
மாற்றங்கள் தேவை
வலது கை வீரர்கள் அதிகம் இருந்ததால் ஹர்பஜன் சிங்குக்கு பதில் சாண்ட்னரை கொண்டு வந்தோம். தேவையில்லாமல் மாற்றங்கள் நாங்கள் எப்போதும் செய்ய மாட்டோம்.
சிரமம் இருந்தது
தொடரில் ஒவ்வொருவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கப்படும். பேட்ஸ்மென்கள் ஜடேஜா, சாண்ட்னர் பந்தை எதிர்கொள்வதில் சிரமம் கண்டனர்.
ஆதரவு தருவர்
எப்போதுமே உள்ளூர் அணிக்கு அதிக ஆதரவு இருக்கும். அவர்களுக்கு தான் ரசிகர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். இதை தான் ஸ்பிரிட் ஆப் த கேம் என்று கூறுவார்கள்.
பிரச்னை இல்லை
கிரிக்கெட் விளையாட்டை பரவலாக சுவாரஸ்யமாக்குவதும் இதுதான். பணம் கொடுத்து போட்டியை நேரில் காணும் ரசிகர்கள் எந்த அணியை ஆதரித்தாலும் பிரச்சினையில்லை என்றார்.