எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
கிரிக்கெட் உலக சாம்பியன் தீர்மானிக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். வங்கதேச அணியும் இம்முறை முக்கிய அணிகளை வீழ்த்தி பலத்துடன் உள்ளதால் உலக கோப்பையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.
தனி ஜெர்சி
வீரர்களை அறிவித்த அதே நேரத்தில் உலக கோப்பைக்காக தனி ஜெர்சியை வடிவமைத்து வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம். ஆனால், அதனை ரசிகர்கள் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
விமர்சனத்தால் நடவடிக்கை
உலக கோப்பை தொடருக்கு செல்லும் முன்பாகவே ரசிகர்களின் இந்த விமர்சனத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் முக்கியமாக கவனத்தில் கொண்டது. உடனடியாக வேறொரு ஜெர்சியை விரைவில் மாற்றி வடிவமைத்து வெளியிடுவோம் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
|
ரசிகர்கள் வரவேற்பு
அதேபோலவே, தற்போது புதிய ஜெர்சியை வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதனை மிர்பூரில் உள்ள மைதானத்தில் அனைவரின் முன்னிலையில் வீரர்கள் அணிந்து பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தனர். இதற்க்கு ரசிகர்கள் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.