
24 வருஷ கிரிக்கெட் வாழ்க்கை
தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையை வாங்கடே மைதானத்தில் வைத்து முடிக்கவுள்ளார் சச்சின்.

நேரில் போய் 500 டிக்கெட் கேட்டார்
இந்தநிலையில் மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளை நேற்று நேரில் சந்தித்தார் டெண்டுல்கர். அப்போது தனக்காக 500 டிக்கெட்களை ஒதுக்கித் தருமாறு அவர் முறைப்படி கோரிக்கை வைத்தார்.

நவம்பர் 14ம் தேதி தொடக்கம்
சச்சின் ஆடவுள்ள இந்த 200வது டெஸ்ட் போட்டியானது, இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியாகும். கொல்கத்தாவில் அதற்கு முன்பு முதலாவது போட்டி நவம்பர் 6 முதல் 10ம்தேதி வரை நடைபெறும்.

அம்மா வருகிறார்
சச்சினின் கடைசிப் போட்டியைக் காண அவரது தாயார் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு ரேம்ப் அமைக்கக் கோரிக்கை
சச்சினின் தாயார் வீல் சேரில்தான் நடமாடுகிறார் என்பதால் அவருக்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்துத் தருமாறும் சச்சின் கோரியுள்ளார்.

அனைத்து வசதியும் செய்ய சங்கம் உறுதி
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் நிதின் தலால் கூறுகையில் சச்சின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கண்டிப்பாக செய்யப்படும். அவரது தாயாருக்காக பிரத்யேகமாக ரேம்ப் அமைக்கவும் ஏற்பாடு செய்வோம் என்றார்.

என்னுடைய படத்தையே கிப்ட்டாக கொடுங்கள்...
மேலும் தனது கடைசிப் போட்டியின்போது தனது ஓவியத்தையே மும்பை கிரிக்கெட் சங்கத்திடமிருந்து பரிசாகப் பெற விரும்புவதாகவும் சச்சின் கோரியுள்ளாராம்.

ஸ்டேடியத்தைச் சுற்றிலும் கட் அவுட்
இதற்கிடையே, சச்சின் டெண்டுல்கரின் கட் அவுட்கள் ஸ்டேடியத்தைச் சுற்றிலும் போட்டி நாட்களின்போது வைக்கப்படவுள்ளதாம். இதை மும்பை கிரிக்கெட் சங்கமே ஏற்பாடு செய்கிறது.

டிக்கெட்டில் சச்சின் போட்டோ
மேலும் போட்டிக்கான டிக்கெட்டில் சச்சினின் புகைப்படம் மற்றும் 51 டெஸ்ட் சதங்களின் ஸ்கோரையும் பிரசுரிக்கவுள்ளனராம்.


Click it and Unblock the Notifications