ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத் தலைவராக மீண்டும் பரூக் அப்துல்லா தேர்வு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத் தலைவராக மீண்டும் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 64 பேர் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது தலைவராக உள்ள மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் எஞ்சிய உறுப்பினர்கள் ஏகமனதாக பரூக் அப்துல்லாவை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக அந்த சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Tuesday, May 13, 2014, 15:08 [IST]
Other articles published on May 13, 2014


Click it and Unblock the Notifications