
பிட்ச்
இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் பிங்க் பால் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இங்கு பீல்டிங் செய்வது கடினம்.

மைதானம்
மைதானத்தில் இருக்கும் பெரும்பாலான இருக்கைகள் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. இதனால் பிங்க் கலர் பந்து வரும் போது அதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். இருக்கைகள் காரணமாக பந்தை வித்தியாசம் காண்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்.

கடினம்
சையது முஷ்டாக் கோப்பை போட்டியிலும், பிங்க் பாலை வைத்து நடந்த பயிற்சியிலும் இங்கு பீல்டிங் செய்த பலர் இதேபோல் கேட்ச்களை விட்டனர். இங்கு பீல்டிங் செய்யும் போது நிறைய தவறுகள் செய்தனர். இதே தவறுகள் இன்றும் டெஸ்ட் போட்டியில் நடக்க வாய்ப்புள்ளது.

கவனம்
இதனால் இன்று வீரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பந்தை கணிப்பதிலும், அதை பார்ப்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பீல்டிங் இந்திய அணிக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications