சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லி ஆகியோர் நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பில் அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். முதலில் களமிறங்கிய இங்கலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் இணைந்து முறையே 33 மற்றும் 26 ரன்களை அடித்து பார்ட்னர்ஷிப்பில் அரைசதத்தை பூர்த்தி செய்தனர். ஆயினும் தற்போது இஙகிலாந்து அணி அடுத்தடுத்து ரோரி பர்ன்ஸ் மற்றும் டான் லாரன்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறி வருகிறது. டாம் சிப்லி மற்றும் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் தற்போது ஆடி வருகின்றனர்.