மோசமான முடிவு
இந்த போட்டியில் ரோஹித் சர்மா கடைசி நேரத்தில் மிகவும் மோசமான முடிவு ஒன்று எடுத்தார். விஜய் சங்கர் சிறந்த வீரர் என்றாலும், அனுபவம் இல்லாத அவரை மிகவும் இக்கட்டான நிலையில் தினேஷுக்கு முன்பாக இறக்கிவிட்டார். அவர் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.
சண்டை
இதனால் தினேஷ் கார்த்திக் கோபத்தில் இருந்துள்ளார். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் 6வது வீரராக களமிறங்குகிறார். வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்தான் கடைசி நேரத்தில் உதவினார். ஆனால் இந்த போட்டியில் களமிறக்காததால் அவர் கோபத்தில் இருந்துள்ளார்.
கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை
மேலும் தினேஷ் கார்த்திக் வெற்றிக்கு வழிவகுப்பார் என்றும் ரோஹித்துக்கு நம்பிக்கை இல்லை. கடைசி பாலில் 5 ரன் தேவைப்பட்ட போது, சூப்பர் ஓவர் விளையாட வேண்டும் என்று ரோஹித் ஆடை மாற்றி இருக்கிறார். கடைசி பந்தில் என்ன நடந்தது என்பதையே ரோஹித் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிரடி
தினேஷ் கார்த்திக் அதிரடிக்கு பின் இந்த கோபமும் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பந்துகளை பறக்கவிட்டு இருக்கிறார். அதேபோல் வின்னிங் ஷாட் மூலம் தன்னை எதிர்த்த கொல்கத்தா நைட் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.