
சொதப்பிய இந்தியா
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-இலங்கை நடுவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது.கோஹ்லி, கே.எல் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இந்தியா பேட்ஸ்மேன்கள் முதல் நாள் போட்டியில் மிகவும் சொதப்பினார்கள். அவர்களை விட மைதானத்தில் மழை நன்றாகவே விளையாடியது.

மோசமான பேட்டிங்
இரண்டாவது நாள் ஆட்டத்திலும் அதிக முறை மழை குறுக்கிட்டது. உணவு இடைவேளைக்கு பின் ஒரு பந்து கூட போடப்படாமல் போட்டி முடிந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் திரும்பி சென்றனர். போட்டியை பார்க்க வந்த ரசிகர்களும் மழை காரணமாக வந்த வேகத்தில் திரும்பி சென்றனர். இரண்டு அணிக்கும் இரண்டாவது நாள் ஏமாற்றமாக இருந்தது.

இந்திய அணி சுருண்டது
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக புஜாரா 52 ரன்கள் எடுத்தார். அதன்பின் களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்து மாஸ் காட்டியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை 10 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார், ஷமி பவுலிங்கில் மாஸ் காட்டி தலா நான்கு விக்கெட்டுகள் எடுத்தனர்.

231 ரன்கள் இலக்கு
இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வந்த இந்திய அணி ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடியது. சிறப்பாக விளையாடிய தவான் 94 எடுத்து அவுட் ஆனார். கோஹ்லி சிறப்பாக ஆடி 104 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த நிலையில் இலங்கை 231 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வந்தது.

டிராவில் முடிந்த டெஸ்ட்
சிறப்பான இந்திய பவுலிங் காரணமாக இலங்கை அணி திணறியது. வரிசையாக இலங்கை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் அவுட் ஆனார்கள். இலங்கை 75 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது. முகமது ஷமி 2 விக்கெட்டுகள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்த சூழ்நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. போட்டி நேரம் முடிவடைந்ததால் டிரா என்று அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











