சிட்னி: இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் விதம் விதமான பந்து வீச்சைப் பார்த்து பயந்து நடுங்கி ஆரம்பத்தில் தடுமாறிய அதிரடி வீரர் ஆரோன் பின்ச் அழகான 50 ரன்களைப் போட்டு நிலைத்து விட்டார்.+

டாஸ் தோற்றதாலோ என்னவோ, இந்தியாவின் வேகப் பந்து வீச்சில் நிறையவே அனல் பறந்தது. இந்த அனலில் தொடக்க ஆட்டக்காரர்களின் பார்ட்னர்ஷிப் செமையாக குழம்பிப் போனது என்னவோ உண்மை.