சிட்னி : கோலியை கொஞ்சம் சுதாரிக்க விட்டுவிட்டால் அவர் இரக்கமே இல்லாமல் அடித்து ஆட ஆரம்பித்து விடுவார் என்று ஆஸ்திரேலியாவின் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
கோலியை சுதாரிக்க விடாமல், நிலையான பௌலிங் மூலம் அவரை வீழ்த்த வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடிலெய்டில் நாளை மறுதினம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் வரும் 17ம் தேதி பகலிரவு டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இதில் மட்டும் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி அதையடுத்து தன்னுடைய குழந்தை பிறப்பையொடி நாடு திரும்பவுள்ளார். தொடர்ந்து அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அஜிங்க்யா ரஹானே கேப்டனாக செயல்பட உள்ளார்.
நீ இல்லாம என்னால் இருக்க முடியாது.. கடைசி சண்டையில் கதறிய சித்ரா.. வெளியான திடுக் தகவல்!
இந்நிலையில், விராட் கோலியை போட்டியின்போது சுதாரிக்க விடக்கூடாது என்றும் அவ்வாறு அவர் ஸ்டாண்ட் செய்துவிட்டால், பின்பு எதிரணியிடம் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் அடித்து ஆடத் துவங்கி விடுவார் என்றும் ஆஸ்திரேலிய அணியின் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். அவரை வீழ்த்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி நிலையான பௌலிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.