
ஆஸ்திரேலியா அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதிலும் சிட்னியில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில், ஆஸி. 197 ரன்களை விளாசியபோதிலும், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதை வென்று ஆறுதல் வெற்றியை கூட கொடுக்காமல் வொயிட் வாஷ் செய்ததை ரசிகர்கள் மறக்க முடியாது.

யுவராஜ்சிங்கின் சிக்சர்
தட்டுத்தடுமாறியபடி இருந்த, யுவராஜ் சிங் கடைசி ஓவரில் சிக்சர் விளாசி போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததை அவரது ரசிகர்களும் மறந்திருக்க மாட்டார்கள். இதேபோல இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே அணியாக இருந்தாலும் அதன் சொந்த மண்ணில் அதை வீழ்த்துவது கஷ்டம்தான். அப்படித்தான் இந்தியாவின் இரண்டாம் கட்ட வீரர்களை அழைத்து சென்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

அமெரிக்காவில் புது முயற்சி
அமெரிக்காவில் டி20 போட்டிகளை நடத்தி புதிய முயற்சியை செய்து பார்த்தது ஐசிசி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியை இழந்தது இந்தியா. ஒரு போட்டியில் ரிசல்ட் வரவில்லை. பிராவோ பந்தில் டோணி அவுட்டாகி கைக்கு வந்த வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications