அசாத்திய பயிற்சி
ஓய்வுக்கு பிறகும் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு இந்திய அணியின் ஏ, 19 வயதுக்குட் பட்டோர் அணிகளில் அசாத்திய பயிற்சி கொடுத்து வருகிறார். இந் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது.
டிராவிட்டுக்கு கேள்வி
அதற்கு அவர் கூறிய பதில்கள் டாப்கிளாஸ் ரகம். டிராவிட் கூறியது இது தான். இப்ப உள்ள கிரிக்கெட் பந்துவீச்சாளர்களில் யார் எனக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று கேட்கிறீர்கள்?
ரபாடா என்றால் பயம்
எனக்கு இன்றைய காலகட்ட பந்துவீச்சாளர்களில் இருவரின் பவுலிங்கை எதிர் கொள்வது மிகவும் சிரமம் என்று நினைக்கிறன். ஒருவர் தென் ஆப்ரிக்காவின் ரபாடா. அவரது துல்லியம், வேகம் நிச்சயம் நான் பேட் செய்தால் அச்சுறுத்தும்.
சிரமப்படுவேன்
அதே போன்று இந்திய அணியிலும் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் புவனேஸ்வர் குமார். அவரது பந்து வீச்சில் நான் விளையாடினாலும் மிகவும் சிரமப்படுவேன் என்று நினைக்கிறேன்.
இது தான் காரணம்
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்ன வென்றால், அவரது ஸ்விங் பவுலிங் அசத்தலாக இருக்கும். எப்போது, எந்த தருணத்தில் ஸ்விங் ஆகும் என்றே எதிர்பார்க்க முடியாது. பந்து வீச்சை கணிப்பது சற்று சிரமம் என்றார்.