
ஆசிய கோப்பை தொடர்
ஆசிய கோப்பை தொடரை இதுவரை அதிகபட்சமாக இந்திய அணி 7 முறை வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் வென்றுள்ளன. இந்த முறை இந்தியா அல்லது பாகிஸ்தான் அணிகள் தான் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரோகித் சர்மா தலைமையில் புதிய இந்திய அணி ஒருபுறமும், பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணியும் மிக பலமாக உள்ளன.

ஷேன் வாட்சன் கணிப்பு
இந்நிலையில் இந்த முறை யார் கோப்பை வெல்வார் என ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆசிய கோப்பையில் மிக முக்கியமான போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி தான் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் கோப்பையையும் கைப்பற்றி அசத்தும்.

யாருக்கு வெற்றி
என்னை பொறுத்தவரையில் இந்திய அணி இந்த முறை வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதுபோல், இந்த முறையும் இந்தியாவை வீழ்த்தலாம் என பாகிஸ்தான் வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் இந்த முறை அந்த பாட்ஷா பழிக்காது.

காரணம் என்ன
தற்போது உள்ள இந்திய அணி மிகவும் பலமான ஒன்றாக உள்ளது. பேட்டிங் வரிசையில் முக்கிய வீரர்கள் கம்பேக் கொடுத்துள்ளதால் எந்த குறையும் இல்லை. பந்துவீச்சிலும் எந்த பிரச்சினையும் இல்லை. ரோகித் சர்மா தலைமையில் வெற்றியை பெற போதிய பலத்துடன் இந்தியா உள்ளது என ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











