
கோலியால் முடியுமா?
உண்மையில் விராட் கோலியால் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் திறம்பட வழிநடத்த முடிகிறதா? என்பதே பல கிரிக்கெட் ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்வி. தோனி போன்ற Smart + Calm கேப்டனால் கூட டி20, ஒருநாள், டெஸ்ட் என்று மூன்று வடிவ கிரிக்கெட்டின் சுமையை சுமக்க முடியவில்லை எனும் போது, அக்ரெஸ்ஸிவ் கேப்டன் விராட் கோலி பட் பட்டென எடுக்கும் முடிவுகளுக்கு சில ஃபார்மட் கிரிக்கெட் ஒத்து வருகிறதா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

கோலி குறித்து ரெய்னா
குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், கோலியை விட மிகச் சிறப்பாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் செயல்பட்டார் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் எக்ஸ்பெர்ட்ஸ்களின் கருத்தாக உள்ளது. இதனால், அவரது கேப்டன் எபிலிட்டி குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ரெய்னா, கேப்டன் விராட் கோலி கேப்டன்ஷிப் மீதான தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

கால அவகாசம் வேண்டும்
இதுகுறித்து நியூஸ் 24 ஸ்போர்ட்ஸிடம் கூறுகையில், ""கோலி நம்பர் 1 கேப்டனாக இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் நிறைய சாதித்துள்ளார் என்பதை அவரது ரெக்கார்டுகள் நிரூபிக்கின்றன. அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அவர் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை என்று பேசுகிறீர்கள். ஆனால் அவர் இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை. அவருக்கு மேலும் சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

நம்பிக்கை வைக்கணும்
மேலும், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றதற்கு பேட்டிங்கில் ஏற்பட்ட பின்னடைவே காரணம் என்பேன். அணியின் முக்கிய வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை காப்பாற்றியிருக்க வேண்டும். அந்த பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். நம்மிடம் ஏற்கனவே 1983 உலகக் கோப்பை, 2007 டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பை உள்ளது. வீரர்கள் கடுமையாக பயிற்சி பெறுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கோலிக்கு இன்னும் சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். விராட் கோலி போட்டியின் சூழலையே தனது பேட்டிங்கால் மாற்றும் திறன் படைத்தவர். எனினும், அடுத்த 12 முதல் 16 மாதங்களுக்குள் இந்திய அணி நிச்சயம் ஐ.சி.சி கோப்பை கையில் ஏதும் என நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications