
ஸ்டோக்ஸின் ஓய்வு
31 வயதே ஆகும் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதற்கு கூறிய காரணம் தான் பரபரப்பை கிளப்பியது. அதாவது டி20, 50 ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் என தொடர்ச்சியாக போட்டிகள் அடுக்கப்படுவதாகவும், பணிச்சுமை அதிகமானதால் வெளியேறுவதாக கூறியிருந்தார். இதன்மூலம் வருமானத்திற்காக போட்டிகளை கணக்கின்றி ஐசிசி நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.

நாசர் ஹுசைன் பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் முக்கிய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், பென் ஸ்டோக்ஸ் தனது 80% ஆட்டத்தை கொடுத்திருந்தால் கூட போதும் தான். ஆனால் அவர் அப்படி விளையாடினால், மற்ற வடிவ கிரிக்கெட்டிலும் அவரின் ஃபார்ம் குறைந்து அவதிப்படுவார். அதில் இருந்து தப்பிக்க தான் இந்த முடிவை எடுத்துவிட்டார்.

என்னதான் ஆனது
உதாரணத்திற்கு விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சனை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் இருவருமே கேப்டன்சி, பணிச்சுமை, ஐபிஎல், காயங்கள் என ஒரே நேரத்தில் சமாளிக்க முயன்று தற்போது மோசமான ஃபார்மில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்களால் முன்பை போன்று விளையாட முடியவில்லை.

ஸ்டோக்ஸுன் பரிதாபம்
பென் ஸ்டோக்ஸ் கூட தற்போது சிறப்பாக இல்லை. நேற்று நடைபெற்ற இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பந்தை சந்திப்பதற்கு திணறியதை தெளிவாக பார்க்க முடிந்தது. எனவே பணிச்சுமையால் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றதே சரி தான் என்பது போன்று நாசர் ஹுசைன் கூறினார்.


Click it and Unblock the Notifications











