பயிற்சியாளர் பதவி
2010ம் ஆண்டு ஓய்வு பெற்றாலும், 2014ம் ஆண்டில் டி20 போட்டிகளில் களமிறங்கினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளார். அது குறித்து பிளின்டாப் கூறியிருப்பதாவது:
இமெயில் அனுப்பினேன்
2014ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள இமெயில் அனுப்பினேன். இந்த மின்னஞசலுக்கு நீண்ட நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை.
நகைச்சுவை
அதன் பிறகு, இமெயில் குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது தொலை பேசி அழைப்பின் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனது இமெயிலை ஜோக் என்று நினைத்திருப்பது தெரிய வந்தது.
பிடித்த விஷயம்
பயிற்சியாளர் பதவி என்பது எனது கனவு. இங்கிலாந்து பயிற்சியாளர் பதவி மிகவும் பிடித்த விஷயம். எனவே, நானும் என்றாவது ஒருநாள் இங்கிலாந்து பயிற்சியாளராக இருப்பேன் என்றார்.