
வெஸ்ட் இண்டீஸ் தொடர்
இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஓரளவிற்கு கணிக்கப்பட்ட போதும், பவுலிங் படை தான் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென அணிக்குள் சேர்க்கப்பட்டிருப்பது தான். சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் அவரை ப்ளேயிங் 11ல் கொண்டு வந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது.

புறக்கணிக்கப்பட்ட அஸ்வின்
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என உறுதி செய்யப்பட்ட பின்னர் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதன்பின்னர் நியூசிலாந்து தொடரில் விளையாடிய அவர், 8 மாதங்களாக அணியிலேயே சேர்க்கப்படவில்லை. அணித்தேர்வு நெருங்கி வரும் சூழலில் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் அதிருப்தி
இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அஸ்வின் விவகாரம் பெரிய குழப்பமாக உள்ளது. அவர் ஏன் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். எதற்காக இங்கிலாந்து தொடரில் எல்லாம் இல்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மட்டும் எதற்காக இருக்கிறார். ஏனென்றால் தற்போது ஜடேஜா தான் முதன்மை பவுலர் மற்றும் சாஹல் 2வது தேர்வு. இவர்களை விட்டால் அக்ஷர் பட்டேல் இருக்கிறார்.

என்னதான் திட்டம்
இந்த 3 ஸ்பின்னர்களை தாண்டி தான் அஸ்வின் இருக்கிறார். எனவே டி20 உலகக்கோப்பை தொடருக்காக திடீரென அஸ்வினை கொண்டு வர நினைப்பது என்ன வகையான திட்டம் என ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இதுவரை 12 ஓவர்களை வீசியுள்ள அஸ்வின் 3 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரின் எகானமி 6.66 ஆகும்.


Click it and Unblock the Notifications











