
விமர்சனங்கள்
குறிப்பாக இந்திய அணியின் ஃபினிஷர் ரோலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.ரிஷப் பண்ட் சரிவர விளையாடாமல் போனதும் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது.தமிழக வீரர் அஸ்வினுக்கும் பெரும்பாலான போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதேபோன்று முகமது ஷமி ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யாததும் விமர்சனத்தை பெற்றது.

குற்றச்சாட்டு
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர் பி சிங் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்த பிறகு டி20 உலக கோப்பையை வெல்ல நமக்கு வாய்ப்பு குறைவு என்றே நான் கருதுகிறேன். உங்களுக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்திருந்தால் அணியில் அடிக்கடி மாற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.

முகமது ஷமி
மொத்தமாகவே 12 வீரர்களுக்கு தான் நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து அணியில் மாற்றங்களை செய்தால் அது உங்களுக்கு குழப்பத்தை மட்டுமே கொடுக்கும். டி20 உலக கோப்பையில் நிச்சயமாக நான் முகமது ஷமியை தேர்வு செய்வேன். காரணம் அவருக்கு வேகமும் பவுன்சும் இருக்கும். இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் குல்திப் யாதவ் நிச்சயமாக அணியில் நான் தேர்வு செய்வேன்.

ராகுல் இல்லை
ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். இதனால் குல்திப் யாதவுக்கு அது சாதகமாக அமையும். கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார், எனினும் இந்திய அணியில் அவரை நான் தேர்வு செய்வேன் என்று ஆர்பி சிங் குறிப்பிட்டுள்ளார்.வரும் 15ஆம் தேதிக்குள் இந்திய அணி அறிவிக்கப்பட வேண்டும்.
இதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்வு குழுவினர் கூடி இந்திய அணி தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications