டெல்லி:ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோனியின் அசத்தல் ஆட்டம்... விசில் போடும்படியாக இருந்தது என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சில ஆட்டங்கள் மறக்க முடியாத அளவுக்கு முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற 2 ஆட்டங்களையும் கூறலாம். முதல் ஆட்டத்தில் சன்ரைசர்சிடம் படுதோல்வி அடைந்த பெங்களூர் அணியால்.. அந்த தோல்வியை மறக்கவே முடியாது என்று சொல்லலாம்.

அடுத்து... கிரிக்கெட் ரசிகர்களின் செல்ல அணி என்று வர்ணிக்கப்பட்ட சென்னை அணியின் வெற்றிதான். ராஜஸ்தான் அணியுடனான அந்த போட்டியில் தோனியின் ஆட்டம் பிரமாதம். அவரின் அந்த ரன்களே அணியின் வெற்றிக்கு கை கொடுத்து, அணியை புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உட்கார வைத்தது எனலாம்.
இந்த 2 ஆட்டங்கள் குறித்து பல முன்னாள் பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக், தல தோனியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது : தோனி விசில் போடவில்லை... விசில் போடு... விசில் போடு என்று குறிப்பிட்டுள்ளார். இது ரொம்ப, ரொம்ப நல்ல விஷயம் என்று அவர் கூறியிருக்கிறார்.