
ஐபிஎல்
கடந்தாண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் பெரிய அளவில் மிஸ் செய்த நிலையில் இந்தாண்டு இந்தியாவில் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை சிறப்பாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. டெல்லி அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்தது. எனவே இந்த முறை அனைத்து அணிகளும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளதால் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முதல் முறை
ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்
இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் இந்த அணிகள் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணியில் பல வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளனர். அதே போல டெல்லி அணிக்கு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பேக் கொடுக்க வேண்டும்
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்தாண்டு ப்ளே ஆப்க்கு கூட செல்லாமல் சொதப்பியது. இதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனுக்கு பிறகு கோப்பையை வெல்லவில்லை. இதே போல கொல்கத்தா அணி 2014ம் ஆண்டுக்கு பிறகும் ஐதரபாத் அணி 2016ம் ஆண்டுக்கு பிறகும் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை.

ஸ்டாக் கணிப்பு
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்தாண்டு ஐபிஎல் குறித்து கணித்துள்ளார். அதன்படி தோனியின் சி.எஸ்.கே அணி இந்த முறையும் கடைசி இடத்தை பிடித்து சொதப்பும் என கூறியுள்ளார். அதே வேளையில் மும்பை அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்றும் டெல்லி அணி 2ம் இடம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ப்ளே ஆஃப்
பஞ்சாப் அணியில் வீரர்கள் தேர்வு சிறப்பாக உள்ளதால் இந்த முறை 3வது இடம் பிடிக்கும் எனவும் ஐதராபாத் அணி 4வது இடத்தை பிடிக்கும் எனவும் ஸ்காட் தெரிவித்துள்ளார். அதே வேளையில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பெங்களூர் அணி 5வது இடத்தையும், ராஜஸ்தான் அணி 6வது இடத்தையும் கொல்கத்தா 7வது இடத்தையும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











