டுவிட்டர் பஞ்சாயத்து
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்... அவர் செய்தது தப்பு.. இதென்ன சாதாரண உள்ளூர் மேட்சா.. உள்ள பூந்து பஞ்சாயத்து பண்ண என்றும் வம்பு குரல்கள் அதிகரித்துள்ளன. அதிலும் இப்போது இருக்கிற டுவிட்டரில் சொல்லவே வேண்டாம்.
கேள்வி
கிடைத்த கேப்பில் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் என ஆளுக்கு ஒரு புறம் தோனியை அரையோ... அரை என அரைத்துக் கொண்டிருக்கின்றனர். கோபம் வந்தால் தோனி என்னவெல்லாம் செய்வாரா? ஆட்டத்தின் ஸ்பிரிட்டை இப்படி தான் குலைப்பதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
|
ஏற்க முடியாத செயல்
இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் டுவிட்டரில் தோனியை கடிந்து கொண்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தோனியின் இந்த செயல் ஆட்டத்துக்கு நல்லதல்ல. களத்துக்கு வெளியில் இருக்கும் கேப்டன் உள்ளே எப்படி செல்லலாம். அவரது இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறியுள்ளார்.
|
உரிமை உண்டு
முன்னாள் வீரர் ஹேமங் பதானியும் விடவில்லை. அவரும் தம் பங்குக்கு தோனியை வாரிவிட்டிருக்கிறார். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: அம்பயர் நோ பால் கொடுத்தால்கூட, அந்த முடிவிலிருந்து பின்வாங்க அம்பயருக்கு உரிமை இருக்கிறது. அப்படி இருக்கும் போது.. தோனி இந்த விவகாரத்தை கையாண்ட விதம் மிகுந்த ஆச்சரியம் தருவதாக உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
|
தவறான முன்னுதாரணம்
தோனிக்கு மைதானத்துக்குள் செல்ல உரிமையே இல்லை. அவர் எப்படி செல்லலாம் என்று விமர்சித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறியிருப்பதாவது: நடப்பு ஐபிஎல் சீசனில் அம்பயர்களின் செயல்பாடுகள் சரியில்லை. நோ பால் கொடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. என்ன இருந்தாலும் எதிரணி கேப்டன் தோனி களத்திற்குள் செல்ல உரிமையில்லை. அவர் தவறான முன் உதாரணத்தை கிரிக்கெட் உலகுக்கு அமைத்து கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் அல்ல
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பவுலர் டைட் தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நினைத்த போதெல்லாம் களத்துக்குள் வந்து செல்ல... இது ஒன்றும் ஊரில் ஆடும் கிரிக்கெட் அல்ல.
உணர வேண்டும்
தோனி அவ்வப்போது தான் ஒரு வீரர் என்பதை மறந்துவிட்டு ஆபிசர் போல நடந்துகொள்கிறார். வீரர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை தோனி உணர வேண்டும் என்று டைட் கடுமையாக விமர்சித்துள்ளார்.