சௌதாம்ப்டன் : இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் நான்காவது போட்டி சௌதாம்ப்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக இந்திய அணி கடந்த 2014ஆம் ஆண்டு விளையாடியது.