
டன் போட்ட முதல் வீரர்
7வது ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சிம்மன்ஸ் நேற்று பெற்றார். இது ஐபிஎல் வரலாற்றில் 29வது சதமும் ஆகும்.

முதல் சதம் போட்ட மெக்கல்லம்
ஐபிஎல் போட்டிகளில் முதன் முதலில் சதம் அடித்த வீரர் பிரன்டன் மெக்கல்லம்தான். 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி பெங்களூர் மைதானத்தில் நடந்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அபாரமாக ஆடி 158 ரன்களைக் குவித்தார். அப்போது அவர் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்தார்.

பெரிய சதம்.. கெய்ல் கையில்
அதேசமயம், அதிகபட்சமாக ஒரு போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர் கிறிஸ் கெய்ல்தான். 2013ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது இவர் புயல் வேகத்தில் ஆடி 175 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதுவரை போடப்பட்டட 29 சதங்கள்
ஐபிஎல் போட்டிகளில் 2008 தொடங்கி இதுவரை 29 சதங்கள் போடப்பட்டுள்ளன.

3 முறை தலா 6 சதங்கள்
இதில் 2008ம் ஆண்டு 6 சதங்கள் விளாசப்பட்டன. 2011ல் 6 சதங்களும், 2012ல் 6 சதங்களும் போடப்பட்டன. 2002ல் 2, 2010ல் 4, 2013ல் சதங்கள் விளாசப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை ஒரே ஒரு சதம்தான் போடப்பட்டுள்ளது.

அதிக சதம் போட்டவர் கெய்ல்...
இதில் கிறிஸ் கெய்ல் மட்டுமே அதிக அளவிலான சதங்களைப் போட்டுள்ளார். மொத்தம் நான்கு சதங்களை அவர் விளாசியுள்ளார். 2011ல் 2 சதம், 2012 மற்றும் 2013ல் தலா ஒரு சதம் என அவர் போட்டுள்ளார்.

முரளி விஜய் - வார்னர் - கில்கிறைஸ்ட்
அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பி்ல் முரளி விஜய் 2 முறை சதம் போட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் சார்பாகவும், டெக்கான் சார்ஜர்ஸ் சார்பாகவும் ஆடம் கில்கிறைஸ்ட் 2 சதங்கள் போட்டுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் 2 சதங்கள் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











