
பிர்மிங்காம்: இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலி, மக்கள் மனதில் இருப்பதை அப்படியே பேசியுள்ளார். இந்திய அணியில் சமீப காலமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இப்படி சுழற்சி முறையில் பயன்படுத்தாமல், நிலையான பதினோரு பேருக்கு வாய்ப்பளித்தால் தான் வீரர்களுக்கு அணி நிர்வாகம் மீது நம்பிக்கை வரும் என கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின் சமூக வலைதளத்தில் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார், கங்குலி. அவர் கூறியது, “ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால் அனைவரும் ரன் குவிக்க வேண்டும். மற்ற பேட்ஸ்மேன்களும் சதமடிக்க வேண்டும். விராட் கோஹ்லி சிறப்பாக ஆடினார். இல்லையென்றால், இரண்டாவது நாளே இந்தியா ஆட்டத்தை விட்டு வெளியேறி இருக்கும்”
