மண்ணை கவ்விய நிகழ்வு
இது குறித்து கங்குலி கூறியிருப்பதாவது: 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியை மறந்துவிடக் கூடாது. அந்த போட்டியில் பாகிஸ்தானை சாதாரணமாக எடைபோட்டுத்தான் மண்ணை கவ்வ நேரிட்டது.
அதிக நம்பிக்கை
எனவே, இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விளையாடும் முன்பே, வெற்றி நமக்கு தான் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையில் ஆட வேண்டாம். முக்கிய போட்டி, எனவே இந்திய அணிக்கு அதிக கவனம் தேவை. நிச்சயம் மிகப்பிரமாதமான ஒரு கிரிக்கெட் போட்டியாக இருக்கும்.
2003ல் நடந்தது என்ன?
ரசிகர்கள் அதிக உற்சாகமாகத்தான் இருப்பார்கள். பாகிஸ்தானில் நாம் வென்றதேயில்லை, ஆனால் 2003ம் ஆண்டில் ஒருநாள் டெஸ்ட் இரண்டிலும் வென்றோம் என்றார்.
பாக். டேஞ்சரான அணி
இந்தியா, பாக். போட்டி குறித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அணி, எப்பொதுமே எதிர்பார்க்க முடியாத, கணிக்க முடியாத அணி. அது ஒரு அபாயகரமான அணியும் கூட. எனவே இந்திய அணி அவர்களை எளிதாக எடைபோட வேண்டாம். அது போன்ற ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக்க வேண்டாம்.
திட்டமிடுவது அவசியம்
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாம் என்ன செய்கிறோம் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்க வேண்டும். நிச்சயம் நன்கு யோசித்து நன்கு திட்டமிட்ட முடிவாக இருப்பது அவசியம். அப்போது தான் அது பலன் தரும என்றார்.