
டெல்லி : ஒரு இணைய நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரி, தான் மேனேஜராக இருந்த போது, 2007 வங்கதேச பயணத்தில் கங்குலி தாமதமாக வந்ததால், பேருந்தை முன்னதாகவே கிளம்பிச் சென்றது என தெரிவித்திருந்தார்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்குலியிடம் இது பற்றி கேட்ட போது, ரவி சாஸ்திரியை காலை நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள், அவருக்கு என்ன பேசினோம் என்பதே நினைவில் இருக்காது, என கலாய்த்து இருக்கிறார். ரவி சாஸ்திரி கூறியது போன்ற சம்பவம் நடைபெறவில்லை என்றும் கூறினார்.
