For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: அர்ஷ்தீப் சிங் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. மிட்செல் விவகாரம்.. கம்பீர் அதிரடி

மும்பை: சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மீது பந்தை வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். அர்ஷ்தீப் சிங் இதற்காக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த ஆட்டத்தின் போது நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது அர்ஷ்தீப் சிங் பந்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்துப் பேசிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஆடுகளத்தில் எதிரணி வீரர்களுடன் நட்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடும் போது வீரர்கள் தங்களது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது முற்றிலும் இயல்பான ஒன்றுதான் என்று அவர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

Gautam Gambhir Backs Arshdeep Singh No Need to Apologize for Aggression Against New Zealand

மன்னிப்பு கேட்கத் தேவையில்லை

தொடர்ந்து பேசிய கௌதம் கம்பீர், எந்தவொரு பந்துவீச்சாளரும் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விட்டுக்கொடுப்பதை விரும்ப மாட்டார் என்று கூறினார். அப்படி சிக்ஸர் கொடுத்த பிறகு ஒரு பந்துவீச்சாளரிடம் இருந்து வெளிப்படும் சரியான பதிலடி இதுதான் என்றும் அவர் தெரிவித்தார். இதில் எந்தத் தவறும் இல்லை என்றும், மைதானத்தில் அர்ஷ்தீப் சிங் அந்தச் செயலுக்காக மன்னிப்பு கேட்டிருக்கத் தேவையில்லை என்றும் அவர் தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.

யுவராஜ் சிங்கை நீக்குமாறு சொன்னது தோனியா? கம்பீரின் கோபம்.. உண்மையை உடைத்த சந்தீப் பாட்டீல்யுவராஜ் சிங்கை நீக்குமாறு சொன்னது தோனியா? கம்பீரின் கோபம்.. உண்மையை உடைத்த சந்தீப் பாட்டீல்

இறுதிப்போட்டியில் நடந்தது என்ன?

நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 11வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் டேரில் மிட்செல் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். அதன்பின்னர் தன்னிடம் நேராக வந்த பந்தை அர்ஷ்தீப் சிங் கோபமாக ஸ்டம்பை நோக்கி வீசினார். ஆனால், அந்தப் பந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் மீது பட்டது.

IND vs NZ: உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்.. கோபமடைந்த அக்சர்.. மன்னிப்பு கேட்ட சூர்யகுமார்IND vs NZ: உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்.. கோபமடைந்த அக்சர்.. மன்னிப்பு கேட்ட சூர்யகுமார்

இதனால் இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அர்ஷ்தீப் சிங் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைகளை மீறியதற்காக அர்ஷ்தீப் சிங்கிற்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 12, 2026, 20:03 [IST]
Other articles published on Mar 12, 2026
English summary
India coach Gautam Gambhir defends Arshdeep Singh’s conduct in the T20 World Cup final, stating players shouldn't apologize for showing aggression and passion while playing for the country.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+