மும்பை: டி20 உலககோப்பையை வென்ற நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தனது செயல்பாடுகள் குறித்து இந்தியக் கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சென்ற நிலையில், தற்போது டெஸ்ட் அணி மாற்றக்கட்டத்தை நோக்கி செல்வதை பற்றி மக்கள் புரிந்துகொள்ளாதது தனது பிழை அல்ல என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
2025 சாம்பியன்ஸ் கோப்பை, 2026ல் நியூசிலாந்துக்கு எதிராக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் இந்தியப் பயிற்சியாளர் என்ற பெருமையை கம்பீர் பெற்றார். தேசமயம், 2024ல் நியூசிலாந்துக்கு எதிராகவும், 2025ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் 2-0 என சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் ஒயிட்வாஷ் தோல்விகளைச் சந்தித்த முதல் பயிற்சியாளரும் இவரே.

இந்தப் பின்னடைவுகள் குறித்து பேசிய கம்பீர், "டெஸ்ட் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசினால். மாற்றம் நிகழ்வதைப் மக்கள் பார்க்கவில்லை என்றால் அது என் தவறு அல்ல. டெஸ்ட் அணியில் 22, 23, 24 வயதுடைய பல இளைஞர்கள் உள்ளனர், மேலும் டெஸ்ட் கிரிக்கெட் எளிதானது அல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டில் இளைய வீரர்கள் வளர்ச்சி பெறுவதற்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

"ஓய்வு பெற்ற வீரர்களைப் பாருங்கள். ஆறு மாதங்களுக்குள் அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களைக் கொண்டு வருவது ஒருபோதும் எளிதானது அல்ல. எனவே, இந்த இளைஞர்களுக்கு நாம் ஆதரவளிக்கவில்லை என்றால் எப்படி, ஒரு பயிற்சியாளராக, அவர்களுக்கு ஆதரவளிப்பது எனது பொறுப்பு."
அத்துடன், அவர், "ஒரு நாடாக, இந்தச் சிறுவர்களுக்கு நாம் ஆதரவளிக்கவில்லை என்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மாற்றம் இன்னும் நீண்ட காலம் எடுக்கும். ஒய்ட்-பால் கிரிக்கெட்டில் ஒருபோதும் சந்தேகம் இருந்ததில்லை, ஏனெனில் இந்தியாவில் ஒய்ட்-பால் கிரிக்கெட்டிற்கான திறமை தொடர்ந்து கிடைக்கிறது, மேலும் நாங்கள் நிறைய ஒய்ட்-பால் கிரிக்கெட் விளையாடுகிறோம்," எனச் சுட்டிக்காட்டினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இளம் ஷுப்மன் கில் தலைமையில் அணி களமிறங்கியது. அவர் முதல் டெஸ்டின் நடுவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ஆனால், 2024ல் நியூசிலாந்துக்கு எதிராக நிகழ்ந்த 3-0 ஒயிட்வாஷ் தொடரில், விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் ஷர்மா போன்ற அனுபவமிக்க வீரர்கள் அனைவரும் அணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்களைப் பற்றிக் குறிப்பிட்ட கம்பீர், "என் கருத்து என்னவென்றால், விமர்சனம் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள்... நான் நேர்மையுடன் பணிபுரியும் வரை, நேர்மையுடன் வீரர்களை ஆதரிக்கும் வரை, இந்திய கிரிக்கெட்டிற்கும், வீரர்களுக்கும் சரியான விஷயங்களைச் செய்யும் வரை, நான் அந்த விமர்சனங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், இறுதியில், நான் அந்த 25-30 சிறுவர்களுக்கும் எனக்கும் மட்டுமே பொறுப்பு."என்றார்.