
விராட் கோலி கம்பேக்
அந்த போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சதம் மட்டுமல்லாமல் அந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ( 276 ரன்கள் ) 2வது இடத்தை பெற்று அசத்தினார். ஆனால் கோலி சதமடித்ததில் இருந்துமே தற்போது புதிய குழப்பம் உருவாகியுள்ளது.

புது குழப்பம்
அதாவது விராட் கோலி சதமடித்தது ஓப்பனிங் வீரராக களமிறங்கி தான். எனவே அவர் ஓப்பனிங் வீரராக களமிறங்கினால் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியும். கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் கூட விளையாடுவார் என்பதால் இந்தியாவின் ஓப்பனிங்கை மாற்றலாம் என பல வல்லுநர்கள் கூறினர்.

கொந்தளித்த கம்பீர்
இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கோலி ஓப்பனிங் ஆட வேண்டும் என்ற முட்டாள்தனமான குழப்பத்தை தொடங்காதீர்கள். அவரால் கே.எல்.ராகுல் அல்லது ரோகித்துடன் சேர்ந்து ஓப்பனிங் ஆட முடியாது. 3வதாக வரும் வீரர் எப்போதுமே சூழலுக்கு ஏற்ப ஆடும் தன்மையுடன் இருப்பார்.

காரணம் என்ன
ஒருவேளை ஓப்பனிங் வீரர்கள் முதல் 10 ஓவர்கள் நின்று ஆடிவிட்டால், சூர்யகுமார் யாதவ் 3வது வீரராக களமிறங்கலாம். அதுவே வெகு சீக்கிரம் விக்கெட் விழுந்துவிட்டால் விராட் கோலி 3வது வீரராக விளையாடலாம். கோலியால் ஆட்டத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் மாற்றி எடுத்து செல்ல முடியும். இதனால் அவருக்கு மிடில் ஆர்டர் தான் சரியாக இருக்கும். அதில் தான் வெற்றியும் கண்டுள்ளார் என கம்பீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications