
கம்பீருக்கு கொலை மிரட்டல்
டெல்லியில் வசித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இன்று காலை திடீரென டெல்லி காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தனக்கு இன்று மின்னஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனை ஐ.எஸ்.ஐ. எஸ் தீவிரவாத அமைப்பு அனுப்பியுள்ளது என புகார் அளித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு
இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், உடனடியாக கம்பீரின் இல்லத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து வல்லுநர்களை வரவழைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன
கம்பீர் போட்ட 2 ட்வீட்களால் தான் தற்போது கொலை மிரட்டல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது மூத்த சகோதரர் போன்றவர் என கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்த கம்பீர், முதலில் உங்களின் வீட்டில் இருந்து யாரையேனும் எல்லைக்கு அனுப்பி பாருங்கள், அதன் பிறகு தீவிரவாத நாட்டின் தலைவரை சகோதரர் என்றுக் கூறுவீர்களா என்று நான் பார்க்கிறேன் என சாடியிருந்தார்.

பரவும் தகவல்
இதே போல பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமான படை கேப்டன் அபிநந்தனுக்கு சமீபத்தில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அப்போது அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, தனது சகோதரர் இவர் என கம்பீர் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு விஷயங்கள் தான் தற்போது ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததற்கு காரணம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications