
கிரிக்கெட் ஹீரோக்கள்
இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வீரர்கள் சூப்பர் ஸ்டார்களை போன்று புகழ்பெறுகின்றனர். 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கபில் தேவ், அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர், தோனி என வரிசையாக இருந்தனர். தற்போது அப்படி இருப்பது விராட் கோலி தான். ஆனால் இவர்களை அப்படி புகழக்கூடாது என கம்பீர் கூறியுள்ளார்.

கம்பீரின் விளாசல்
இதுகுறித்து பேசிய கம்பீர், ஒரு ஹீரோவை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களை மட்டுமே புகழும் பழக்கம் இந்தியாவை ஆட்டிபடைத்து வருகிறது. முன்பு தோனி இருந்தார், தற்போது விராட் கோலி இருந்து வருகிறார். இதெல்லாம் எப்படி ஏற்படுகிறது? மற்ற வீரர்களெல்லாம் அணிக்காக உழைப்பது யார் கண்களுக்கும் தெரிவதில்லை.

புவினேஷ்வரை மறந்தார்கள்
ஆசியக்கோப்பையில் விராட் கோலி சதமடித்துவிட்டார் என நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால் அதே போட்டியில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை கைப்பற்றி கரியர் பெஸ்ட் பவுலிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் அதுகுறித்து யாருமே பேசவில்லை. கமெண்ட்ரியில் கூட நான் மட்டுமே அவரின் சாதனை குறித்து பேசினேன். இது மிகவும் கேவலமான ஒன்றாகும்.

என்ன காரணம்
இந்த பிரச்சினைகளுக்கு முதல் காரணம் சமூகவலைதளம் தான். அதிகப்படியான ஃபாலோவர்கள் இருந்தால் அவர் பெரிய வீரர் என புகழப்படுகிறார். ஃபாலோவர்கள் குறைவாக இருப்பவர்கள் நல்ல வீரர்கள் இல்லையா??.. 2வதாக ஊடகங்கள் குறிப்பிட்ட ஒரு வீரரை மட்டும் அடிக்கடி செய்தி வெளியிடுவதும், காரணமாக பார்க்கப்படுகிறது. இதனையெல்லாம் மாற்ற வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications