கங்குலிக்கு புகழாரம் சூட்டிய கோலி
நடந்து முடிந்துள்ள இந்தியாவின் முதல் பகலிரவு போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. தன்னுடைய முதல் சதத்தை இந்த போட்டியில் பதிவு செய்துள்ளார் கோலி. போட்டியை அடுத்து பேசிய கோலி, டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட கற்றுக் கொண்டதாகவும், கங்குலி கேப்டனாக இருந்தபோது துவங்கிய இந்த பயணத்தை இந்திய அணி தற்போது தொடர்வதாகவும் தெரிவித்திருந்தார்.
வரலாற்றை திரும்பி பாருங்க...
இந்திய அணியின் கேப்டன் கோலியின் இந்தக் கருத்துக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மறுப்பு தெரிவித்திருந்தார். ஏதோ 2000ல் தான் இந்திய அணி வெற்றிப் பயணத்தை துவங்கியதாக பேச வேண்டாம் என்றும் 70 மற்றும் 80களிலேயே தன்னுடைய வெற்றிகளை இந்தியா பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கவாஸ்கர் கருத்து
70 மற்றும் 80களில் இந்திய அணி தன்னுடைய வெற்றிப் பயணத்தை துவக்கிவிட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல வெற்றிகளை பெற்றது என்று தெரிவித்த கவாஸ்கர், அப்போது கோலி பிறந்திருக்க மாட்டார் என்று தெரிவித்திருந்தார். மேலும் பிசிசிஐ தலைவர் என்பதாலேயே அவரை பாராட்ட கோலி இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.
கோலிக்கு ஆதரவு கருத்து
இந்நிலையில், கங்குலி குறித்த கோலியின் கருத்தை முன்னாள் வீரர் கவுதம் ஆமோதித்துள்ளார். சவுரவ் கங்குலியின் தலைமையில்தான் நாம் அதிக அளவிலான வெளிநாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.