
பாரம்பரிய முறை
சர்வதேச போட்டியில் எந்த வீரர் அறிமுகமானாலும் அவருக்கு போட்டி தொடங்குவதற்கு முன் தொப்பி வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படும். இந்திய அணியை பொறுத்தவரை மைதானத்தில் உள்ள முன்னாள் வீரர்களை வரவழைத்து தொப்பியை வழங்கி, அந்த வீரரை வாழ்த்தி ஊக்கம் தர சொல்வார்கள். இந்த பாரம்பரியத்தையே அனைத்து அணிகளும் பின்பற்றின

குற்றச்சாட்டு
இந்திய அணி காலம் காலமாக பின்பற்றி வந்த முறையை ரவி சாஸ்த்ரியும், விராட் கோலியும் மாற்றி விட்டதாக நேரலையின் போதே கவாஸ்கர் ஆதங்கமாக குற்றஞ்சாட்டினார். தற்போது பயிற்சியாளர் டிராவிட்டும், ரோகித் சர்மாவும் ஹர்சல் பட்டேலுக்கு அகார்கரை வைத்து தொப்பி வழங்கியதன் மூலம் பாரம்பரியத்தை கடைபிடிப்பதாக கவாஸ்கர் பாராட்டு தெரிவித்தார். இதே போன்ற பணியை கும்ப்ளே செய்த போது, அவர் மாற்றப்பட்டதாக கவாஸ்கர் மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

அமைதி
கவாஸ்கர் நேரலையில் இந்த குற்றச்சாட்டை வைத்த போது மற்ற முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் அமைதி காத்து, அவரது கருத்தை ஆதரித்தனர். முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும், கோலியும் தான்தோன்றித்தனமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது முன்னாள் வீரர் ஒருவரே வெளிப்படையாக கூறியது, இந்திய கிரிக்கெட் எந்த நிலையில் இருந்தது என்பதை காட்டுகிறது

புதிய தொடக்கம்
ரவி சாஸ்த்ரியும், கோலியும் இந்திய அணியின் நிர்வாகத்தில் பல தடாலடி மாற்றங்களை கொண்டு வந்தனர். இதனை எல்லாம் சரி செய்து, அணியை ஒழுங்கு படுத்துவதே டிராவிட், ரோகித் சர்மாவுக்கு பெரிய பணியாக இருக்கும். இந்த நிலையில், டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளுக்கு கோலி கேப்டனாக திரும்பினால் அவர் ராகுல் டிராவிட் சொல்வதை கேட்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் இப்படி ஒரு பிரச்சினை வந்த போது தான் கோலியின் அழுத்தத்தால் கும்ப்ளே மாற்றப்பட்டார்.ஆனால் அப்படி ஒரு சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலையில் விராட் கோலி இல்லை என்பது அவருக்கே நன்கு தெரியும்.


Click it and Unblock the Notifications











