
பந்தும் பேட்டும் பேசட்டுமே...
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், நான் எப்போதுமே இதைத்தான் கூறி வருகிறேன். மைதானத்தில் எப்போதுமே பந்தும், பேட்டும்தான் பேச வேண்டும். தற்போது நடந்ததை மறந்து விட்டு அடுத்தவற்றில் கவனத்தைத் திருப்புவதே நல்லது.

அதையை நினைத்துக் கொண்டிருந்தால்
நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் எதிர் வரும் போட்டிகளில் வெல்வது கடினமாகி விடும். அதை அப்படியே விட்டு விட வேண்டும்.

மேட்ச் ரெப்ரீ வேற ஒருத்தர்
அடுத்து உள்ள 2 போட்டிகளுக்கும் வேறு ஒரு போட்டி நடுவர் வருவதாக கருதுகிறேன். புதிதாக வரும் ரஞ்சன் மதுகல்லே, இரு தரப்பு வீரர்களும் போட்டியின் கெளரவத்தைக் குலைக்காத வகையில் கண்ணியமான முறையில், விளையாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடப்பதை உறுதி செய்வார் என்று நம்புகிறேன்.

வார்னிங் கொடுக்கலாம்
ஆண்டர்சனுக்கும் மற்ற வீரர்களுக்கும் யாரும் தவறு செய்யாதீர்கள், தவறு செய்தால் தப்பமுடியாது என்ற அறிவுறுத்தலை அவர் கொடுக்கலாம். இது ஆரோக்கியமான விளையாட்டுக்கு வழி வகுக்கும்.

நல்ல பிள்ளைக்கு அழகு
நடந்ததை குழி தோண்டிப் புதைத்து விட்டு அடுத்து நடக்கவுள்ளதைப் பற்றிக் கவலைப்படுவதுதான் நல்ல வீரர்கள் செய்யும் செயல். அதை இந்திய வீரர்கள் செய்ய வேண்டும். டோணியும், அவரது அணியினரும் அதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார் கவாஸ்கர்.


Click it and Unblock the Notifications











