லண்டன் : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவின் மோசமான பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட்.
அவர் எழுதிய கட்டுரையில், இந்திய அணியின் பேட்டிங் தவறுகள் குறித்து கூறியிருக்கிறார். அதில் இந்திய அணி இங்கிலாந்து பிட்ச்களின் தன்மை, இங்கே வேகப்பந்துவீச்சின் வேகம், நகரும் தன்மை (Swing) உள்ளிட்ட அடிப்படை பற்றி கூட சிந்திக்காமல், தவறான வகையில் பேட்டிங் செய்து வருவதாக கூறி சாடியுள்ளார். அவரது கருத்துகள் சிலவற்றை காண்போம்.