For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரு வீரர்களை மட்டுமே ஆஸி நம்பி இருக்கிறது.. 4-0 தோல்வி அடையாமல் வந்தாலே சாதனை தான்- மெக்ராத் கருத்து

மும்பை : இந்தியாவில் நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஸ்சேஞ்ச் மட்டுமே நம்பி இருப்பதாக கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் புகழ்பெற்ற கிளென் மெக்ராத் கூறினார். முதல் இரண்டு டெஸ்டுகளில் பலத்த தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா ஏற்கனவே பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்தது.

ஆஸ்திரேலிய அணி, அவர்களின் அணுகுமுறை மற்றும் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

கேம் பிளான்

கேம் பிளான்

ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு குறித்து பேசிய மெக்ராத்,"இந்த நேரத்தில் ஸ்மித் மற்றும் மார்னஸ் மீது அதிகம் நம்பியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். டிராவிஸ் ஹெட் ஒரு நல்ல ஆண்டையும் பெற்றுள்ளார். முழு பேட்டிங் வரிசையும் ரன் குவிக்க வேண்டும்," இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பது குறித்த கேம் பிளானில் அவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

அழுத்தம் கொடுங்கள்

அழுத்தம் கொடுங்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் தற்காப்புடன் இருந்தனர், இரண்டாவது டெஸ்டில் அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தனர். எனவே அவர்கள் அந்த இரண்டு போட்டிகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்களா என்று பார்ப்போம். "இந்தியாவில், நீங்கள் உறுதியான பாதுகாப்பில் ஒரு இன்னிங்ஸை உருவாக்க வேண்டும், பின்னர் ஸ்கோர் செய்வதற்கான வழிகளைப் பார்த்து, பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

தவறு செய்தனர்

தவறு செய்தனர்

வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் இல்லாதது அணியின் சமநிலையை பாதித்தது, ஆனால் அதே நேரத்தில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் தேர்வு முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கியதாக மெக்ராத் கூறினார். கடைசி மூன்று பேட்டர்களும் 160-க்கு மேல் போட்டுள்ளனர். அவர்களால்தான் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் பந்துவீச்சு மாற்றங்களைச் சரியாகச் செய்தாரா? ஒருவேளை பேட் கம்மின்ஸ் முன்பே வந்திருக்கலாம்.

மெக்ராத் கருத்து

மெக்ராத் கருத்து

"சிறிதளவு ரிவர்ஸ் ஸ்விங் அங்குள்ள ஆரம்ப விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த ஆடுகளங்களில் எப்படி விளையாடுவது என்பது இந்திய வீரர்களுக்கு தெரியும் . அதனை பார்த்தாவது மாற்றங்களை செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா விஷயங்களை மாற்றுவதற்கு நீண்ட தூரம் உள்ளது. இந்த தொடரில் 4-0 என்று தோல்வியை தழுவாமல் ஆஸ்ரேலிய அணி கரையை விட்டு வெளியேறினால், அவர்கள் நன்றாகச் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று ஆஸி., வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறினார்.

Story first published: Monday, February 27, 2023, 23:38 [IST]
Other articles published on Feb 27, 2023
English summary
Glenn McGrath advices Australia team about facing India in test இரு வீரர்களை மட்டுமே ஆஸி நம்பி இருக்கிறது.. 4-0 தோல்வி அடையாமல் வந்தாலே சாதனை தான்- மெக்ராத் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+