
ஷஷாங்க் பதவிக்காலம் நிறைவு
ஐசிசி தலைவராக உள்ள ஷஷாங்க் மனோகரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுகும் பணி முடுக்கிவிடப்பட உள்ளது. இந்த பதவிக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் கொலின் கிரேவ்ஸ் நியமிக்கபபடலாம் எறு கருதப்படுகிறது. இந்நிலையில் கிரீம் ஸ்மித் கங்குலி அந்த பதவிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நவீன விளையாட்டிற்கு சிறப்பு
கங்குலி போன்றவர் ஐசிசி தலைவராக நியமிக்கப்படுவது சிறப்பாக இருக்கும் என்று ஸ்மித் குறிப்பிட்டுள்ளார். அது கிரிக்கெட்டிற்கும் நவீன விளையாட்டுகளுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நவீன கிரிக்கெட்டை கங்கு நன்கு புரிந்துள்ளதாகவும் அவரது தலைமையில் கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சரியான அணுகுமுறை
சவுரவ் கங்குலியுடன் தான் நீண்ட நாட்கள் பழகியுள்ளதாகவும், கிரிக்கெட் போட்டிகளை சரியான முறையில் அணுகும் திறன் அவருக்கு உள்ளதாகவும் ஸ்மித் மேலும் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஐசிசி தலைவர் பதவி மிக முக்கியமான அங்கத்தை வகிப்பதாகவும் இந்த சிறப்பான தருணத்தில் சிறப்பான பதவியை வகிக்க கங்குலி சிறப்பானவர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்திய வேட்பாளருக்கு ஆதரவு
இந்நிலையில் கிரீம் ஸ்மித்தின் இந்த கருத்துக்கு கிரிக்கெட் தென்னாப்பாக்காவின் சிஇஓ ஜாக்குவஸ் ஃபால் வரவேற்பு தெரிவித்துள்ளார். தான் கங்குலியுடன் அதிகளவிலான போட்டிகளை விளையாடியதில்லை என்று கூறியுள்ள அவர், ஆனால் இந்த நேரத்தில் இந்திய நபர் ஒருவரை தான் ஆதரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











