மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கிரேக் சேப்பலின் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மும்பை வாங்கடே ஸ்டேடிய வளாகத்தில் உள்ள வாரிய அலுவலகத்தில் தொடங்கியது.இக்கூட்டத்துக்கு வந்த சேப்பல் தனது அறிக்கையை கொடுத்து விட்டு சுமார் 2 மணி நேரம் காரசாரமாக விவாதித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.தனது ஹோட்டலுக்குத் திரும்பிய சேப்பல், நேற்று இரவு முழுவதும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இன்று காலை அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் ெகாண்டு செல்லபபட்டு அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல் நலம் தற்போது சீராக இருப்பதாக சேப்பலின் மனைவி ஜூடி கூறியுள்ளார். சேப்பல் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.