சென்னை: திரில் வெற்றிகளுக்கு சொந்தக்காரர்களாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயப்படுவது யாருக்கு தெரியுமா?
ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியுள்ளது.
இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே, இந்த சீசனையும் சேர்த்து இதுவரை விளையாடிய 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த சாதனையைப் புரிந்த ஒரே அணி சிஎஸ்கே தான்.
நாளை நடக்கும் பிளே ஆப் சுற்றின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை சந்திக்கிறது சிஎஸ்கே.
இந்த நிலையில், புதிய தமிழ் புலவரான சிஎஸ்கேவின் ஹர்பஜன் சிங், டுவிட்டரில் தமிழில் ஒரு செய்தி போட்டுள்ளார். அதில், சிஎஸ்கே யாருக்காக பயப்படுகிறது என்று கூறியுள்ளார்.
ஓவர் டு புலவர் ஹர்பஜன் சிங்:
"எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது. அன்ப கொட்டிக் கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரக் குடுத்தாச்சும் கப் ஜெய்ச்சு பெருமை சேக்கனும்ங்கற பயம் நிறையா இருக்கு. ஒரே ஒரு ஆசை தான், @IPL முடியும்போது "தல" கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும்
@ChennaiIPL #கற்றவை"
இப்பப் புரியதா யாருக்கு சிஎஸ்கே பயப்படுகிறது என்று.
எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது அன்ப கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரக்குடுத்தாச்சும் கப் ஜெய்ச்சு பெருமை சேக்கனும்ங்கற பயம் நிறையா இருக்கு.ஒரே ஒரு ஆசை தான்,@IPL முடியும்போது "தல" கைல கப் இருக்கணும்,ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் @ChennaiIPL #கற்றவை
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 20, 2018