மொயீன் அலி எங்கே, அஸ்வின் எங்கே?
ஹர்பஜன் இது குறித்து கூறுகையில், "அந்த ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய உதவி இருந்தது. மொயீன் அலி 9 விக்கெட்கள் எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்கள் மட்டுமே எடுத்தார்"
மொயீன் அலி எப்படி வீழ்த்தினார்
"அந்த ஆடுகளத்தில் இருந்த சொரசொரப்பான பகுதியில் பந்தை வீசி இருந்தாலே, நிறைய விக்கெட்கள் கிடைத்து இருக்கும். அதை தான் மொயீன் அலி செய்தார். அதிக விக்கெட்கள் எடுத்தார்" என கூறினார் ஹர்பஜன்.
அஸ்வினால் தான் போச்சு
மேலும், "முதல் முறையாக இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர்கள், இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை விட நன்றாக வீசுவதை பார்க்கிறேன். அஸ்வின் விக்கெட் எடுக்க முடியாததால் தான் நாம் 1-3 என தொடரை இழந்துள்ளோம்" என கடுமையாக கூறினார்.
மொயீன் அலியை சமாளிக்காத இந்தியா
"மொயீன் அலியின் பந்துவீச்சை சமாளிக்க இந்திய அணி இன்னும் ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை. 2014ஆம் ஆண்டும் அவர்தான் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்" எனவும் கூறினார் ஹர்பஜன்.